முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 93. பெருந்தகை புண்பட்டாய்!
புறநானூறு - 93. பெருந்தகை புண்பட்டாய்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர் தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு, ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், |
5 |
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என |
10 |
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ; வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து அண்ணல் யானை அடுகளத் தொழிய, அருஞ்சமம் ததைய நூறி, நீ பெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 93. பெருந்தகை புண்பட்டாய்!, பெருந்தகை, இலக்கியங்கள், புறநானூறு, புண்பட்டாய், விழுப்புண், பட்டு, மன்னர், சங்க, எட்டுத்தொகை, வாகை