முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 90. புலியும் மானினமும்!
புறநானூறு - 90. புலியும் மானினமும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: தானை மறம்.
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழும் சாரல் மறப்புலி உடலின், மான்கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
5 |
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை |
10 |
வழுவில் வன்கை, மழவர் பெரும! இருநில மண் கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 90. புலியும் மானினமும்!, இலக்கியங்கள், உண்டோ, புறநானூறு, புலியும், மானினமும், ஞாயிறு, மலரும், மழவர், காந்தள், எட்டுத்தொகை, சங்க, கமழும், இருளும்