புறநானூறு - 75. அரச பாரம்!
பாடியவன்: சோழன் நலங்கிள்ளி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப், பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! |
5 |
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல, நன்றும் நொய்தால் அம்ம தானே-மையற்று, |
10 |
விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 75. அரச பாரம்!, இலக்கியங்கள், சிறியோன், விழுமியோன், புறநானூறு, பாரம், பெறின், யார், மூத்தோர், எட்டுத்தொகை, சங்க, எய்தினம், ஆயின்