முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி.
துறை : துணை வஞ்சி.
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின், நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு |
5 |
இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க: நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க; மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் கடிமரம் தடிதல் ஓம்பு! நின் |
10 |
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!, இலக்கியங்கள், காவன்மரமும், புறநானூறு, கட்டுத்தறியும், ஆயினும், வஞ்சி, எட்டுத்தொகை, சங்க