முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 41. காலனுக்கு மேலோன்!
புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
காலனும் காலம் பார்க்கும்; பாராது வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே! திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும், பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும், |
5 |
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும், அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும், எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும், |
10 |
கனவின் அரியன காணா, நனவின் செருச்செய் முன்ப,! நின் வருதிறன் நோக்கி, மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர், புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு |
15 |
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு எரிநிகழ்ந் தன்ன செலவின் செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!, இலக்கியங்கள், விழுதல், காலனுக்கு, புறநானூறு, மேலோன், எண்ணெய், எட்டுத்தொகை, சங்க