முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 394. என்றும் செல்லேன்!
புறநானூறு - 394. என்றும் செல்லேன்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின், ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன், வள்ளிய னாதல் வையகம் புகழினும்! உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்! |
5 |
யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப், பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக, அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக், |
10 |
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி யான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அது சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர் பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு, |
15 |
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும், துன்னரும் பரிசில் தரும் என, என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 392 | 393 | 394 | 395 | 396 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 394. என்றும் செல்லேன்!, புலவர், பரிசில், குட்டுவன், என்றும், இலக்கியங்கள், செல்லேன், அவனிடம், புறநானூறு, யானையைக், அவன், எட்டுத்தொகை, மேலும், புலவர்களே, வழங்கினான், நான், சங்க, கண்டு, பாடினேன், பரிசாக, அந்த, வைகறை, அஞ்சி