முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 391. வேலி ஆயிரம் விளைக!
புறநானூறு - 391. வேலி ஆயிரம் விளைக!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும் விண்டு அனைய விண்தோய் பிறங்கல் முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி, |
5 |
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென, ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி நனந்தலை மூதூர் வினவலின், |
10 |
முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் அளியன் ஆகலின், பொருநன் இவன் என, நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக், காண்கு வந்திசிற் பெரும, மாண்தக இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் |
15 |
ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும் துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின், நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு, இன்துயில் பெறுகதில் நீயே; வளஞ்சால் துளிபதன் அறிந்து பொழிய, |
20 |
வேலி ஆயிரம் விளைக நின் வயலே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 389 | 390 | 391 | 392 | 393 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 391. வேலி ஆயிரம் விளைக!, ஆயிரம், வேலி, விளைக, இலக்கியங்கள், நெல், விளைச்சல், புறநானூறு, என்னும், பருகி, பெருகவேண்டும், வந்து, வாழும், கூறினர், இங்கு, மகிழ்கிறது, வரைப்பின், உயர்ந்த, விண்டு, சங்க, எட்டுத்தொகை, மூரி, அரியல், வயல், பொருநன், வேங்கட, போல்