முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 388. நூற்கையும் நா மருப்பும்!
புறநானூறு - 388. நூற்கையும் நா மருப்பும்!
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.
பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான் பண்ணன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல் பள்ளம், வாடிய பயன்இல் காலை, இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர் சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித், தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை |
5 |
இடுக்கண் இரியல் போக, உடைய கொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல், நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக, வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம் பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ; அவன் |
10 |
வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா, நாடொறும் பாடேன் ஆயின், ஆனா மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன், பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை அண்ணல் யானை வழுதி, |
15 |
கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 386 | 387 | 388 | 389 | 390 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 388. நூற்கையும் நா மருப்பும்!, பண்ணன், சிறுகுடி, புலவர், இலக்கியங்கள், புறநானூறு, நூற்கையும், என்றும், மருப்பும், காலத்தில், பாண்டிய, வழுதி, என்கிறார், குறிப்பிடுகிறார், கிழான், சங்க, எட்டுத்தொகை, பெரும்பெயர், எந்தை, தென்னவன், யானை