முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 384. நெல் என்னாம்! பொன் என்னாம்!
புறநானூறு - 384. நெல் என்னாம்! பொன் என்னாம்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.
திணை: பாடாண்.
துறை: கையறுநிலை.
மென் பாலான் உடன் அணை இ, வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை அறைக் கரும்பின் பூ அருந்தும்; வன் பாலான் கருங்கால் வரகின் . . . |
5 |
அங்கண் குறுமுயல் வெருவ, அயல கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து; விழவின் றாயினும், உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து; . . . . . கிணையேம் பெரும! |
10 |
நெல் என்னாம், பொன் என்னாம், கனற்றக் கொண்ட நறவு என்னும், . . . . மனை என்னா, அவை பலவும் யான் தண்டவும், தான் தண்டான், நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை |
15 |
மண் நாணப் புகழ் வேட்டு, நீர் நாண நெய் வழங்கிப், புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை; அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
20 |
உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும். வந்த வைகல் அல்லது, சென்ற எல்லைச் செலவு அறி யேனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 382 | 383 | 384 | 385 | 386 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 384. நெல் என்னாம்! பொன் என்னாம்!, என்னாம், அவன், நெல், கொடுத்தான், இலக்கியங்கள், பொன், புறநானூறு, போட்டான், எங்கே, கரும்பனூர், போனால், எனக்கென்ன, சோறு, போதும், நாரை, கிழான், சங்க, எட்டுத்தொகை, பாலான், உறங்கும், புகழ், உழவர், நெய்