முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 381. கரும்பனூரன் காதல் மகன்!
புறநானூறு - 381. கரும்பனூரன் காதல் மகன்!
பாடியவர்: புறத்திணை நன்னகனார்.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
ஊனும் ஊணும் முனையின், இனிதெனப், பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து, மெல்லிது பருகி, விருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாகச், சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு? என, |
5 |
யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது அன்புடை மையின், எம்பிரிவு அஞ்சித் துணரியது கொளாஅ வாகிப், பழம்ஊழ்த்துப், பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண் |
10 |
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச், சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி, விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின், இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு |
15 |
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், இருநிலம் கூலம் பாறக், கோடை வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச், சேயை யாயினும், இவணை யாயினும் இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! |
20 |
சிறுநனி, ஒருவழிப் படர்க என் றோனே - எந்தை, ஒலிவெள் அருவி வேங்கட நாடன்; உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பியின் மான, மறப்பின்று, இருங்கோள் ஈராப் பூட்கைக் |
25 |
கரும்பன் ஊரன் காதல் மகனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 379 | 380 | 381 | 382 | 383 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 381. கரும்பனூரன் காதல் மகன்!, காதல், இலக்கியங்கள், மகன், கரும்பனூரன், புறநானூறு, அம்பி, புலவர், பெரியவர்களையும், அவன், போலவும், என்றான், இருந்தாலும், கொட்டுவது, யாயினும், சங்க, எட்டுத்தொகை, கலந்து, மன்னர், வேங்கட, அதனால், அறத்துறை