முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி,
குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.
வரை புரையும் மழகளிற்றின் மிசை, வான் துடைக்கும் வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே! நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, |
5 |
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச், செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, |
10 |
எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப் பொலம்பூங் காவின் நன்னாட் டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை, உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும் கடவ தன்மையின், கையறவு உடைத்துஎன, |
15 |
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், நின்நாடு உள்ளுவர், பரிசிலர்: ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!, வேண்டியது, விளைக்கும், இலக்கியங்கள், புறநானூறு, வேந்தன், உடையவன், இரத்தலும், ஈதலும், இடம், நிழலிலே, அளவு, நோக்கும், ஆற்றலை, சங்க, எட்டுத்தொகை, நோக்கும்வாய், வேண்டினும், நின்நிழல், பிறந்து