முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 369. போர்க்களமும் ஏர்க்களமும்!
புறநானூறு - 369. போர்க்களமும் ஏர்க்களமும்!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.
திணை: வாகை.
துறை: மறக்களவழி.
இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின், கருங்கை யானை கொண்மூவாக, நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக, |
5 |
அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின், வெவ் விசைப் புரவி வீசுவளி யாக, விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை, ஈரச் செறுவயின் தேர்ஏ ராக, |
10 |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால். பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி, விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப், பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, |
15 |
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப், பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப், பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள! தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்தின் போர்வை |
20 |
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப், பாடி வந்திசின் பெரும; பாடான்று எழிலி தோயும் இமிழிசை யருவிப், பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத் தன்ன ஓடைநுதல, ஒல்குதல் அறியாத், |
25 |
துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி; தாழா ஈகைத், தகை வெய் யோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 367 | 368 | 369 | 370 | 371 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 369. போர்க்களமும் ஏர்க்களமும்!, இலக்கியங்கள், ஏர்க்களமும், போர்க்களமும், புறநானூறு, நல்கவேண்டும், முகந்து, பாயும், மறவர், சங்க, எட்டுத்தொகை, பேய்மகள்