முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 367. வாழச் செய்த நல்வினை!
புறநானூறு - 367. வாழச் செய்த நல்வினை!
பாடியவர்: அவ்வையார்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்.
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்
ஒருங்கிருந்தாரைப் பாடியது.
நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா; வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, |
5 |
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; வாழச் செய்த நல்வினை அல்லது, |
10 |
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்; யான் அறி அளவையோ இவ்வே; வானத்து |
15 |
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கும் மாமழை உறையினும், உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 365 | 366 | 367 | 368 | 369 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 367. வாழச் செய்த நல்வினை!, நல்வினை, வேண்டும், வாழச், செய்த, இலக்கியங்கள், வழங்க, வழங்கவேண்டும், புறநானூறு, பெருகவேண்டும், காட்டிலும், உதவும், என்றாலும், வாழ்நாள், இணைந்து, எண்ணிக்கையைக், மகளிர், மண்டிலம், சங்க, எட்டுத்தொகை, பார்ப்பார்க்கு, பூவும், இல்லை, பொன்னும், வானத்து