முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 362. உடம்பொடுஞ் சென்மார்!
புறநானூறு - 362. உடம்பொடுஞ் சென்மார்!
பாடியவர்: சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல்
துறை: பெருங்காஞ்சி
ஞாயிற்றுஅன்ன ஆய்மணி மிடைந்த மதியுறழ் ஆரம் மார்பில் புரளப், பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப், பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர் செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி |
5 |
அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை, கூற்றத் தன்ன மாற்றரு முன்பன், ஆக்குரல் காண்பின் அந்த ணாளர் நான்மறை குறித்தன்று அருளாகா மையின் அறம்குறித் தன்று; பொருளா குதலின் |
10 |
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇக், கைபெய்த நீர் கடற் பரப்ப, ஆம் இருந்த அடை நல்கிச், சோறு கொடுத்து, மிகப் பெரிதும் வீறுசான் நன்கலம் வீசி நன்றும், |
15 |
சிறுவெள் என்பின் நெடுவெண் களரின், வாய்வன் காக்கை கூகையொடு கூடிப் பகலும் கூவும் அகலுள் ஆங்கண், காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு இல்என்று இல்வயின் பெயர ; மெல்ல |
20 |
இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி, உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 360 | 361 | 362 | 363 | 364 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 362. உடம்பொடுஞ் சென்மார்!, சென்மார், இலக்கியங்கள், புறநானூறு, உடம்பொடுஞ், போர், இருந்த, போல், வழங்கப்படுமாம், நீர், அறம், தன்ன, எட்டுத்தொகை, சங்க, மார்பில், அந்த, நான்மறை