முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 361. முள் எயிற்று மகளிர்!
புறநானூறு - 361. முள் எயிற்று மகளிர்!
பாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில.
கார் எதிர் உருமின் உரறிக், கல்லென, ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத் |
5 |
தாயின்நன்று பலர்க்கு ஈத்துத், தெருணடை மாகளிறொடு தன் அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், உருள்நடைப் ப்றேர் ஒன்னார்க் கொன்றுதன் தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், |
10 |
புரி மாலையர் பாடி னிக்குப் பொலந் தாமரைப் பூம் பாணரொடு கலந் தளைஇய நீள் இருக் கையால் பொறையொடு மலிந்த கற்பின், மான்நோக்கின், வில்என விலங்கிய புருவத்து, வல்லென, |
15 |
நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர் அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி, அமிழ்தென மடுப்ப மாந்தி, இகழ்விலன், நில்லா உலகத்து நிலையாமைநீ |
20 |
சொல்லா வேண்டா தோன்றல், முந்துஅறிந்த முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 359 | 360 | 361 | 362 | 363 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 361. முள் எயிற்று மகளிர்!, மகளிர், இலக்கியங்கள், முள், புறநானூறு, எயிற்று, வழங்கினானாம், மகிழ்ந்தானாம், நல்லன, சங்க, எட்டுத்தொகை, அல்குல், கண்டு