முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 360. பலர் வாய்த்திரார்!
புறநானூறு - 360. பலர் வாய்த்திரார்!
பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர்
திணை: காஞ்சி
துறை: பெருங்காஞ்சி
பெரிது ஆராச் சிறு சினத்தர், சில சொல்லால் பல கேள்வியர், நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர் கலுழ் நனையால் தண் தேறலர், கனி குய்யாற் கொழுந் துவையர், |
5 |
தாழ் உவந்து தழூஉ மொழியர், பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி ஏம மாக இந்நிலம் ஆண்டோர் சிலரே; பெரும! கேள் இனி ; நாளும், பலரே தகை அது அறியா தோரே! |
10 |
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத |
15 |
கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி, புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு, அழல்வாய்ப் புக்க பின்னும், |
20 |
பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 358 | 359 | 360 | 361 | 362 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 360. பலர் வாய்த்திரார்!, வேண்டும், இலக்கியங்கள், புறநானூறு, வாய்த்திரார், பலர், சங்க, கனியக், தரவேண்டும், பயன், எட்டுத்தொகை, சாற்றினையும்