முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 359. நீடு விளங்கும் புகழ்!
புறநானூறு - 359. நீடு விளங்கும் புகழ்!
பாடியவர்: கரவட்டனார்.
பாடப்பட்டோன்: அந்துவன் கீரன்.
திணை: காஞ்சி.
துறை: பெருங்காஞ்சி.
பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின், வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல, பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி, விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர் |
5 |
களரி மருங்கில் கால்பெயர்த் தாடி, ஈம விளக்கின் வெருவரப் பேரும் காடுமுன் னினரே, நாடுகொண் டோரும்! நினக்கும் வருதல் வைகல் அற்றே; வசையும் நிற்கும், இசையும் நிற்கும்; |
10 |
அதனால் வசைநீக்கி இசைவேண்டியும், நசை வேண்டாது நன்று மொழிந்தும், நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு, பொலம் படைய மா மயங்கிட, இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது |
15 |
கொள் என விடுவை யாயின், வெள்ளென ஆண்டுநீ பெயர்ந்த பின்னும், ஈண்டுநீடு விளங்கும், நீ எய்திய புகழே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 357 | 358 | 359 | 360 | 361 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 359. நீடு விளங்கும் புகழ்!, புகழ், இலக்கியங்கள், விளங்கும், நீடு, நிற்கும், புறநானூறு, இறந்த, பின்னரும், காடு, பிணம், இரவலர்க்கு, எட்டுத்தொகை, அதனால், சங்க