முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 356. காதலர் அழுத கண்ணீர்!
புறநானூறு - 356. காதலர் அழுத கண்ணீர்!
பாடியவர்: தாயங்கண்ணனார்
திணை: காஞ்சி
துறை: பெருங்காஞ்சி
களரி பரந்து, கள்ளி போகிப், பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு; நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் |
5 |
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப, எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய்த், தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 354 | 355 | 356 | 357 | 358 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 356. காதலர் அழுத கண்ணீர்!, மகளிர், காதலர், கண்ணீர், அழுத, இலக்கியங்கள், முதுகாடு, பிணம், புறநானூறு, கிடக்கும், திரிவர், எரியும், வைப்பு, களரி, எட்டுத்தொகை, சங்க, எரிந்து