முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
புறநானூறு - 341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு அம்பூந் தொடலை அணித்தழை அல்குல், செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின் அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் |
5 |
.. .. .. . .. .. ... .. .. .. .. புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு, மாற்றம் மாறான், மறலிய சினத்தன், பூக்கோள் என ஏஎய்க், கயம்புக் கனனே; விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல், சுணங்கணி வனமுலை, அவளொடு நாளை |
10 |
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ- ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின், நீள்இலை எகம் மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்று- எனப் படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக் |
15 |
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப், பெருங்கவின் இழப்பது கொல்லோ, மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 339 | 340 | 341 | 342 | 343 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!, அவள், வேந்தன், இழப்பது, பெருங்கவின், கொல்லோ, இலக்கியங்கள், கொண்ட, தந்தை, நாளை, புறநானூறு, கோட்டை, அந்தக், கொண்டது, எட்டுத்தொகை, ஆணையிட்டான், சங்க, காஞ்சி, வாரா, உலகம், போலப், பூக்கோள்