முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 33. புதுப்பூம் பள்ளி!
புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை:வாகை.
துறை: அரசவாகை.
சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி.
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன் மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய, ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் |
5 |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும், ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்; பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; பாடுநர் வஞ்சி பாடப், படையோர் |
10 |
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப், புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்துகண் டன்ன ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும் செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை; |
15 |
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக் காம இருவர் அல்லது, யாமத்துத் தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின், ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி |
20 |
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!, புதுப்பூம், பள்ளி, இலக்கியங்கள், நெல்லைப், அரசன், புறநானூறு, இருவர், கொண்டுவந்த, கொடுத்துவிட்டு, காட்சி, ஆடுவது, கொண்ட, கைப்பற்றிய, பெற்றுச், வஞ்சி, சோழன், சங்க, எட்டுத்தொகை, நலங்கிள்ளி, வேட்டுவன், பச்சிலை, கதவம், ஏழெயில், தனிமகன்