முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 325. வேந்து தலைவரினும் தாங்கம்!
புறநானூறு - 325. வேந்து தலைவரினும் தாங்கம்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
களிறுநீ றாடிய விடுநில மருங்கின், வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக், குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின், செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல் முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
5 |
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர் உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறில் முன்றில் கூறுசெய் திடுமார், கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
10 |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும் அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 323 | 324 | 325 | 326 | 327 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 325. வேந்து தலைவரினும் தாங்கம்!, அவன், இலக்கியங்கள், வேந்து, தாங்கம், மக்கள், தலைவரினும், புறநானூறு, அந்த, நாட்டு, அங்குள்ள, வாழ்க்கை, எட்டுத்தொகை, சங்க, இரத்தி