புறநானூறு - 320. கண்ட மனையோள்!
பாடியவர்: வீரை வெளியனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப், பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல், கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப், பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர் தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட, |
5 |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து, மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி |
10 |
கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென, ஆர நெருப்பின், ஆரல் நாறத் தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம் இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித், தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
15 |
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும் அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 318 | 319 | 320 | 321 | 322 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 320. கண்ட மனையோள்!, மனையோள், இலக்கியங்கள், கண்ட, வேட்டுவன், புறநானூறு, நிழல், யானை, பறவைகள், கிடக்கின்றன, கைம்மான், எட்டுத்தொகை, சங்க, பார்வை, மடப்பிணை