முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 318. பெடையொடு வதியும்!
புறநானூறு - 318. பெடையொடு வதியும்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க, மயில்அம் சாயல் மாஅ யோளொடு பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_ மனைஉறை குரீஇக் கறையணற் சேவல், பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் |
5 |
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப், பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் புன்புறப் பெடையொடு வதியும் யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 316 | 317 | 318 | 319 | 320 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 318. பெடையொடு வதியும்!, இலக்கியங்கள், வதியும், பெடையொடு, புறநானூறு, பெருந்தகை, சிட்டுக்குருவி, எட்டுத்தொகை, சங்க