முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 304. எம்முன் தப்பியோன்!
புறநானூறு - 304. எம்முன் தப்பியோன்!
பாடியவர்: அரிசில்கிழார்
திணை: தும்பை
துறை : குதிரை மறம்
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி, நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி, வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி பண்ணற்கு விரைதி, நீயே;நெருநை எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு |
5 |
நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப், புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான் கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; |
10 |
இரண்டா காது அவன் கூறியது எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 302 | 303 | 304 | 305 | 306 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 304. எம்முன் தப்பியோன்!, இலக்கியங்கள், தப்பியோன், எம்முன், புறநானூறு, அவன், மாலை, சங்க, எட்டுத்தொகை, வேந்தன்