புறநானூறு - 301. அறிந்தோர் யார்?
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: தும்பை
துறை : தானை மறம்
பல் சான்றீரே ! பல் சான்றீரே! குமரி மகளிர் கூந்தல் புரைய, அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே! முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்; |
5 |
ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்! எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள் எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால் அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே! |
10 |
பலம் என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண் நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி, வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி, எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லென வேந்தூர் யானைக்கு அல்லது, |
15 |
ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 299 | 300 | 301 | 302 | 303 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 301. அறிந்தோர் யார்? , அறிந்தோர், இலக்கியங்கள், யார், புறநானூறு, உங்களது, உங்களுடைய, பாதுகாத்துக்கொள்ளுங்கள், எத்தனை, வரும், நீங்கள், உண்மைதான், ஓம்புமின், சங்க, எட்டுத்தொகை, சான்றீரே, கூந்தல், பலம், என்பது