முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 28. போற்றாமையும் ஆற்றாமையும்!
புறநானூறு - 28. போற்றாமையும் ஆற்றாமையும்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
சிறப்பு: எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு. சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும், கூனும், குறளும், ஊமும், செவிடும் மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் |
5 |
பேதைமை அல்லது ஊதியம் இல், என முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும், அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:- வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் |
10 |
கானத் தோர், நின் தெவ்வர்; நீயே புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப் பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே; |
15 |
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும், பெரும! நின்செல்வம்; ஆற்றாமை நின் போற்றா மையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 28. போற்றாமையும் ஆற்றாமையும்!, இலக்கியங்கள், அறம், நின், போற்றாமையும், பொருள், புறநானூறு, ஆற்றாமையும், தாமரைப், ஆடுகளம், வகையில், மூன்றும், காப்போர், இன்னும், பற்றிய, எண்பேர், எட்டுத்தொகை, இன்பம், சங்க, சேவல்