முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 261. கழிகலம் மகடூஉப் போல!
புறநானூறு - 261. கழிகலம் மகடூஉப் போல!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: கரந்தை
துறை: கையறு நிலை
அந்தோ! எந்தை அடையாப் பேரில்; |
5 |
வையங் காவலர் வளம்கெழு திருநகர், மையல் யானை அயாவுயிர்த் தன்ன நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
10 |
பல்ஆ தழீஇய கல்லா வல்வில் உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி, நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட, நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய |
15 |
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக், கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகலம் மகடூஉப் போல புல்என் றனையால், பல்அணி இழந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 259 | 260 | 261 | 262 | 263 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 261. கழிகலம் மகடூஉப் போல!, கழிகலம், இலக்கியங்கள், மகடூஉப், வீரன், சூட்டப்பட்டு, புறநானூறு, இல்லம், புலம்பிக், கிடக்கிறது, புல்லென்று, அவனது, கூகை, யானை, சங்க, எட்டுத்தொகை, கரந்தை, அந்தோ, முன்னே, பெருஞ்சோற்று, கல்லா