முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 257. செருப்பிடைச் சிறு பரல்!
புறநானூறு - 257. செருப்பிடைச் சிறு பரல்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வெட்சி
துறை: உண்டாட்டு
செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால், அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண், குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச், செவிஇறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு, யார்கொலோ, அளியன் தானே? தேரின் |
5 |
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக் காடுகைக் கொண்டன்றும், இலனே ; காலைப், புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக், கையின் சுட்டிப் பைஎன எண்ணிச், சிலையின் மாற்றி யோனே ; அவைதாம் |
10 |
மிகப்பல ஆயினும், என்னாம்-எனைத்தும் வெண்கோள் தோன்றாக் குழிசியொடு, நாள்உறை மத்தொலி கேளா தோனே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 255 | 256 | 257 | 258 | 259 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 257. செருப்பிடைச் சிறு பரல்!, இலக்கியங்கள், சிறு, செருப்பிடைச், புறநானூறு, பரல், இலனே, அகன்ற, எட்டுத்தொகை, சங்க