முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 243. யாண்டு உண்டுகொல்?
புறநானூறு - 243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல் செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத், தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து, தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி, மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு |
5 |
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து, நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக், கரையவர் மருளத், திரையகம் பிதிர, நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, குளித்துமணற் கொண்ட கல்லா இளமை |
10 |
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ- தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று, இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 241 | 242 | 243 | 244 | 245 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 243. யாண்டு உண்டுகொல்?, இளமை, இலக்கியங்கள், புறநானூறு, யாண்டு, உண்டுகொல், கபடம், கரையில், இப்போது, அந்த, எங்கே, கள்ளம், கல்லா, எட்டுத்தொகை, சங்க, தொடித்தலை, பாய்ந்து, இல்லாமல்