முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 235. அருநிறத்து இயங்கிய வேல்!
புறநானூறு - 235. அருநிறத்து இயங்கிய வேல்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே! பெரிய கட் பெறினே, யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே! பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே! |
5 |
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே! அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே! நரந்தம் நாறும் தன் கையால், புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ, |
10 |
இரப்போர் புன்கண் பாவை சோர, அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில் சென்றுவீழ்ந் தன்று, அவன் அருநிறத்து இயங்கிய வேலே! ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ? |
15 |
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை; பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 233 | 234 | 235 | 236 | 237 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 235. அருநிறத்து இயங்கிய வேல்!, மன்னே, இல்லை, அவன், இலக்கியங்கள், அருநிறத்து, இயங்கிய, வேல், புறநானூறு, நாறும், இனிப், எந்தை, உணவு, துளைத்துக்கொண்டு, அரிய, நெஞ்சில், எனக்குக், கொடுத்துவிடுவான், வழியெல்லாம், எமக்கீயும், பெறினே, சங்க, எட்டுத்தொகை, உண்ணும், நனிபல, பாவை, கையால், கலத்தன், நாவில்