புறநானூறு - 224. இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்; துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி, இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து, முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த |
5 |
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு, பருதி உருவின் பல்படைப் புரிசை, எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண், வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்; அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்; |
10 |
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம் அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப், பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப், பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார், பூவாட் கோவலர் பூவுடன் உதிரக் |
15 |
கொய்துகட்டு அழித்த வேங்கையின், மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 222 | 223 | 224 | 225 | 226 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 224. இறந்தோன் அவனே!, இறந்தோன், இலக்கியங்கள், புறநானூறு, அவனே, வந்து, வேதவேள்வி, மெல்லியல், சங்க, எட்டுத்தொகை, ததூஉம்