புறநானூறு - 222. என் இடம் யாது?
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும்
உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக் கேட்டுப் பாடியது இச் செய்யுள் அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி, நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என |
5 |
என்இவண் ஒழித்த அன்பி லாள! எண்ணாது இருக்குவை அல்லை; என்னிடம் யாது? மற்று இசைவெய் யோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 220 | 221 | 222 | 223 | 224 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 222. என் இடம் யாது?, இடம், யாது, இலக்கியங்கள், புறநானூறு, மேனி, என்னை, பிறந்தபின், சங்க, எட்டுத்தொகை, பொத்தியார்