முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 216. அவனுக்கும் இடம் செய்க!
புறநானூறு - 216. அவனுக்கும் இடம் செய்க!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்
துறை: இயன்மொழி
குறிப்பு : வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.
கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய, வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும், அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்! |
5 |
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே; புன்பெயர் கிளக்கும் காலை, என் பெயர் பேதைச் சோழன் என்னும், சிறந்த காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை, |
10 |
இன்னதோர் காலை நில்லலன்; இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 214 | 215 | 216 | 217 | 218 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 216. அவனுக்கும் இடம் செய்க!, இடம், அவனுக்கும், இலக்கியங்கள், சோழன், அவன், செய்க, புறநானூறு, நேரில், வடக்கிருக்க, உண்டு, என்னுடன், உரிமை, பழகிய, சங்க, எட்டுத்தொகை, ஒழிக்க, ஐயம், காலை, சிறந்த