முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 212. யாம் உம் கோமான்?
புறநானூறு - 212. யாம் உம் கோமான்?
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்:
துறை: இயன்மொழி.
`நுங்கோ யார்?` வினவின், எங்கோக் களமர்க்கு அரித்த விளையல் வெங்கள் யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா, ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ, வைகுதொழின் மடியும் மடியா விழவின் |
5 |
யாணர் நல்நாட் டுள்ளும், பாணர் பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக், கோழி யோனே, கோப்பெருஞ் சோழன் பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ, வாயார் பெருநகை வைகலும் நமக்கே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 210 | 211 | 212 | 213 | 214 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 212. யாம் உம் கோமான்?, உண்பர், இலக்கியங்கள், கோமான், யாம், புறநானூறு, வாழ்கிறான், மடியா, அவன், அவர்களின், காமம், கோப்பெருஞ், எட்டுத்தொகை, சங்க, பிசிராந்தையார், சோழன், யார்