முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 210. நினையாதிருத்தல் அரிது!
புறநானூறு - 210. நினையாதிருத்தல் அரிது!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்:
துறை: பரிசில் கடாநிலை.
மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது, அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு, நும்ம னோரும்மற்று இனையர் ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி |
5 |
உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின் உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், அறனில் கூற்றம் திறனின்று துணியப் பிறனா யினன்கொல்? இறீஇயர், என் உயிர்!` என நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும் |
10 |
இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலை விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்: அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர் அருங்கடி முனையரண் போலப் பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 208 | 209 | 210 | 211 | 212 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 210. நினையாதிருத்தல் அரிது!, இலக்கியங்கள், அரிது, நினையாதிருத்தல், புறநானூறு, புலம்பிக்கொண்டு, சிறிதேனும், உயிர், அறனில், சங்க, எட்டுத்தொகை, ஆயின்