முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 209. நல்நாட்டுப் பொருந!
புறநானூறு - 209. நல்நாட்டுப் பொருந!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: மூவன்.
திணை: பாடாண்:
துறை: பரிசில் கடாநிலை.
பொய்கை நாரை போர்வில் சேக்கும் நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர் கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல் அடை அரியல் மாந்திக், தெண்கடல் படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும் |
5 |
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந! பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகத்து. பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப் பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப். பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் |
10 |
நசைதர வந்து, நின்இசை நுவல் பரிசிலென் வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந! ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்; நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள் குறுநணி காண்குவ தாக - நாளும், |
15 |
நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித், தெரியிழை அன்ன மார்பின், செருவெம் சேஎய்! நின் மகிழ்இரு க்கையே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 207 | 208 | 209 | 210 | 211 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 209. நல்நாட்டுப் பொருந!, இலக்கியங்கள், பொருந, நல்நாட்டுப், புறநானூறு, குறுநணி, இருந்துபோகட்டும், வந்து, சங்க, எட்டுத்தொகை, நின்