முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 207. வருகென வேண்டும்!
புறநானூறு - 207. வருகென வேண்டும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்:
துறை: பரிசில்.
எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, பருகு அன்ன வேட்கை இல்அழி, அருகிற் கண்டும் அறியார் போல, அகம்நக வாரா முகன்அழி பரிசில் தாள்இலாளர் வேளார் அல்லர்? |
5 |
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே பெரிதே உலகம்; பேணுநர் பலரே; மீளி முன்பின் ஆளி போல, உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென நோவா தோன்வயின் திரங்கி, |
10 |
வாயா வன்கனிக்கு உலமரு வோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 205 | 206 | 207 | 208 | 209 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 207. வருகென வேண்டும்!, வேண்டும், வருகென, இலக்கியங்கள், பரிசில், புறநானூறு, உலகம், எழுக, வெள்ளென, செல்வோம், நம்மைக், உள்ளம், என்னும், அல்லர், எட்டுத்தொகை, சங்க, கண்டும், வரிசை, மீளி