முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 206. எத்திசைச் செலினும் சோறே!
புறநானூறு - 206. எத்திசைச் செலினும் சோறே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்:
துறை: பரிசில்.
வாயி லோயே! வாயிலோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! |
5 |
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்? அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை உலகமும் அன்றே; அதனால், காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; |
10 |
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே; எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 204 | 205 | 206 | 207 | 208 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 206. எத்திசைச் செலினும் சோறே!, எத்திசைச், இலக்கியங்கள், அஞ்சி, நெடுமான், செலினும், சோறே, வாயிலோயே, கொண்ட, புறநானூறு, கலப்பை, அதனால், அறியவில்லையா, இருக்கிறது, புகழும், அறிவும், உடையவர்கள், வாயி, சங்க, எட்டுத்தொகை, அதியமான், பரிசில், பரிசிலர்க்கு, லோயே, கடுமான்