முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 201. இவர் என் மகளிர்!
புறநானூறு - 201. இவர் என் மகளிர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன் : இருங்கோவேள்.
திணை; பாடாண்.
துறை: பரிசில்.
குறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.)
`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே, ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன் முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை, படுமணி யானைப்,பறம்பின் கோமான் நெடுமாப் பாரி மகளிர்; யானே |
5 |
தந்தை தோழன்: இவர்என் மகளிர்; அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே; நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச், செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை, உவரா ஈகைத், துவரை ஆண்டு, |
10 |
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்! தாரணி யானைச் சேட்டிருங் கோவே! ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்! |
15 |
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல் பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல் உடலுநர் உட்கும் தானைக், கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே! |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 199 | 200 | 201 | 202 | 203 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 201. இவர் என் மகளிர்! , மகளிர், முனிவன், புறநானூறு, இலக்கியங்கள், வடபால், என்னும், இவர், கொண்டு, இருங்கோவேள், குறிப்பு, தவம், புலிகடிமால், கடமை, முனிவர், என்பது, புலிகடி, சங்க, ஆற்றிய, பாரி, எட்டுத்தொகை