முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 179. பருந்து பசி தீர்ப்பான்!
புறநானூறு - 179. பருந்து பசி தீர்ப்பான்!
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென, ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை மலர்ப்போர் யார்? என வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், |
5 |
படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும், வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத், தோலா நல்லிசை, நாலை கிழவன், |
10 |
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவேல் நாகற் கூறினர், பலரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 177 | 178 | 179 | 180 | 181 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 179. பருந்து பசி தீர்ப்பான்!, இலக்கியங்கள், நாலை, பருந்து, நாகன், தீர்ப்பான், புறநானூறு, கூறினர், வேண்டுப, உடையவன், உண்கலத்தை, உதவியும், என்னும், பாண்டியன், எனவும், எட்டுத்தொகை, கிழவன், யார், சங்க, வேண்டுவழி