முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 177. யானையும் பனங்குடையும்!
புறநானூறு - 177. யானையும் பனங்குடையும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும்
வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.)
ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர், வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப், பாடிப் பெற்ற பொன்னணி யானை, தமர்எனின், யாவரும் புகுப; அமர்எனின், திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக், |
5 |
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப், புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர் தீம்புளிக் களாவொடு துடரி முனையின், மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக், |
10 |
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும், பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு, எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை, வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, |
15 |
இரும்பனங் குடையின் மிசையும் பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 175 | 176 | 177 | 178 | 179 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 177. யானையும் பனங்குடையும்!, இலக்கியங்கள், குகை, புறநானூறு, யானையும், பனங்குடையும், சற்றே, உண்பர், பறித்து, எந்திரப், எட்டுத்தொகை, சங்க, இருந்த, குடநாடு