முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 168. கேழல் உழுத புழுதி!
புறநானூறு - 168. கேழல் உழுத புழுதி!
பாடியவர்: கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : பிட்டங் கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக் |
5 |
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார், மரையான் கறந்த நுரைகொள் தீம்பால், மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச், |
10 |
சாந்த விறகின் உவித்த புன்கம், கூதளங் கவினிய குளவி முன்றில், செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி, |
15 |
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும! கைவள் ஈகைக் கடுமான் கொற்ற! வையக வரைப்பில் தமிழகம் கேட்பப், பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப் பாடுப என்ப பரிசிலர், நாளும்; |
20 |
ஈயா மன்னர் நாண, வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 166 | 167 | 168 | 169 | 170 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 168. கேழல் உழுத புழுதி!, இலக்கியங்கள், கேழல், உழுத, அந்த, புறநானூறு, புழுதி, தினையை, வாழை, சமைப்பர், முற்றத்தில், புன்கம், அதில், காந்தள், சங்க, எட்டுத்தொகை, துறை, அருவி, குறவர், மரையான்