முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 161. பின் நின்று துரத்தும்!
புறநானூறு - 161. பின் நின்று துரத்தும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில். குறிப்பு : பாடிப் பகடு பெற்றது.
(பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது.)
நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு, |
5 |
மன்பதை யெல்லாம் சென்றுணர், கங்கைக் |
10 |
வன்கலை தெவிட்டும், அருஞ்சுரம் இறந்தோர்க்கு, இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர்` எனக் கண் பொறி போகிய கசிவொடு, உரன்அழிந்து, அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின் தாள்படு செல்வம் காண்டொறும் மருளப், |
15 |
பனைமருள் தடக்கை யொடு முத்துப்படு முற்றிய உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு, ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில் படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, செலல்நசைஇ உற்றனென்-விறல்மிகு குருசில்! |
20 |
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி! வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே, என்அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் |
25 |
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப் பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம் மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல, நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின் தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப, |
30 |
வாள் அமர் உயர்ந்தநின் தானையும், சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 159 | 160 | 161 | 162 | 163 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 161. பின் நின்று துரத்தும்!, இலக்கியங்கள், நான், பின், வந்துள்ளேன், நின், நின்று, துரத்தும், வேண்டும், புறநானூறு, மகளிர், அளந்து, வழியில், வழங்க, செல்வம், வேந்தே, எமக்கும், பரிசில், சங்க, எட்டுத்தொகை, பாடிப், மாறிய, ஆடவர், நிறைந்து, சென்று