முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!
புறநானூறு - 155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!
பாடியவர்: மோசி கீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை: பாணாற்றுப்படை
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, `உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க``எனக், கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்; பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு, |
5 |
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் கொண்பெருங்காலத்துக் கிழவன் தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 153 | 154 | 155 | 156 | 157 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!, இலக்கியங்கள், ஞாயிறு, நெருஞ்சிப், புறநானூறு, எதிர்ந்த, நெருஞ்சி, புலவர், சூரியனையே, சங்க, எட்டுத்தொகை, கொண்கானங்