முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 146. தேர் பூண்க மாவே!
புறநானூறு - 146. தேர் பூண்க மாவே!
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.
அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக! சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல நன்னாடு பாட, என்னை நயந்து பரிசில் நல்குவை யாயின், குரிசில் ! நீ |
5 |
நல்கா மையின் நைவரச் சாஅய், அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன, ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத், தண்கமழ் கோதை புனைய, |
10 |
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 144 | 145 | 146 | 147 | 148 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 146. தேர் பூண்க மாவே!, மாவே, இலக்கியங்கள், பூண்க, தேர், நின், புறநானூறு, மனைவி, பூட்டுக, அதற்காக, வேண்டும், இருக்கட்டும், எட்டுத்தொகை, பரிசில், சங்க