முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 141. மறுமை நோக்கின்று!
புறநானூறு - 141. மறுமை நோக்கின்று!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை: பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.
பாணன் சூடிய பசும்பொன் தாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக், கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ, ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! யாரீ ரோ? என வனவல் ஆனாக், |
5 |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! வென்வேல் அண்ணல் காணா ஊங்கே, நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, இன்னேம் ஆயினேம் மன்னே ; என்றும் உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும் |
10 |
படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன், எத்துணை ஆயினும் ஈதல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றே, பிறர், வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 141. மறுமை நோக்கின்று!, பாணன், மறுமை, நோக்கின்று, அவன், பேகன், இலக்கியங்கள், புறநானூறு, என்னும், குளிரில், பேகனிடம், வறுமை, விறலி, எட்டுத்தொகை, சங்க, அண்ணல், மன்னே