புறநானூறு - 140. தேற்றா ஈகை!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை.
தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் மடவன், மன்ற; செந்நாப் புலவீர்! வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை ஆக யாம் சில அரிசி வேண்டினெம் ஆகத், தான் பிற |
5 |
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி. இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர் பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர் தேற்றா ஈகையும் உளதுகொல்? போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 138 | 139 | 140 | 141 | 142 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 140. தேற்றா ஈகை!, தேற்றா, இலக்கியங்கள், புறநானூறு, நாஞ்சில், கவனமாக, இருங்கள், புலவர்களே, அரிசி, எட்டுத்தொகை, சங்க