புறநானூறு - 135. காணவே வந்தேன்!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில்.
கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை, அருளிடர்ச் சிறுநெறி ஏறலின், வருந்தித், தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின், வளைக்கை விறலியென் பின்னள் ஆகப், பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் |
5 |
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப், படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப், புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி வந்தெனன் எந்தை! யானே: யென்றும் |
10 |
மன்றுபடு பரிசிலர்க் காணின், கன்றொடு கறையடி யானை இரியல் போக்கும் மலைகெழு நாடன்! மாவேள் ஆஅய்! களிறும் அன்றே; மாவும் அன்றே; ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே; |
15 |
பாணர், படுநர்,பரிசிலர், ஆங்கவர், தமதெனத் தொடுக்குவர் ஆயின், எமதெனப் பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு, அன்ன வாக, நின் ஊழி; நின்னைக் காண்டல் வேண்டிய அளவை; வேண்டார் |
20 |
உறுமுரண் கடந்த ஆற்றல் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 133 | 134 | 135 | 136 | 137 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 135. காணவே வந்தேன்!, வழங்குவாய், இலக்கியங்கள், காணவே, அன்றே, வந்தேன், புறநானூறு, பாணர், பரிசில், எட்டுத்தொகை, சங்க, பயங்கெழு