புறநானூறு - 132. போழ்க என் நாவே!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே! ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல |
5 |
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 130 | 131 | 132 | 133 | 134 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 132. போழ்க என் நாவே!, போழ்க, நாவே, இலக்கியங்கள், புறநானூறு, உள்ள, தென்திசையில், இமயமலையின், காலம், வடதிசையில், உள்ளம், எட்டுத்தொகை, சங்க, மேய்ந்த, பருகி