புறநானூறு - 122. பெருமிதம் ஏனோ!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார், கழல்புனை திருந்துஅடிக் காரி! நின் நாடே; அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே; வீயாத் திருவின் விறல் கெழு தானை மூவருள் ஒருவன், துப்பா கியர் என, |
5 |
ஏத்தினர் தரூஉங் கூழே, நும்குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே; வடமீன் புரையுங் கற்பின், மடமொழி, அரிவை தோள் அளவு அல்லதை, நினது என இலைநீ பெருமிதத் தையே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 122. பெருமிதம் ஏனோ!, இலக்கியங்கள், பெருமிதம், புறநானூறு, தோள், நாட்டில், இல்லை, வடமீன், காரி, எட்டுத்தொகை, சங்க, அந்தணர், அதுவே